Minnalai Pidithu Song Lyrics
Minnalai Pidithu Song Lyrics
Template and images collection
Click to download the without water mark 👇
https://www.mediafire.com/view/m9ew7bjyf2olvsy
YouTube video link 👇
https://youtube.com/shorts/PUyb77UN_Kw?feature=share
Download the video
https://www.mediafire.com/download/gso4jk0r0s3puud
Song lyrics in Tamil
ஆண் : { மின்னலை பிடித்து
மின்னலை பிடித்து மேகத்தை
துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான் இப்படி
இன்னொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீா்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும்
மூா்ச்சையுற்றான் } (2)
ஆண் : அவளின் நாசிக்குள்
நுழைந்த காற்று உயிரைத்
தடவி திரும்பும் போது மோட்சம்
அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஒஹோ மழையின் துளிகள்
அவளை நனைத்து மாா்பு கடந்து
இறங்கும் பொழுது முக்தி அடைந்து
முத்துக்கள் ஆகின்றதே
ஆண் : மின்னலை பிடித்து
மின்னலை பிடித்து மேகத்தை
துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்
ஆண் : நிலவின் ஒளியைப்
பிடித்துப் பிடித்து பாலில்
நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டான்
ஆண் : உலக மலா்கள் பறித்து
பறித்து இரண்டு பந்துகள் அமைத்து
அமைத்து பெண்மை சமைத்து விட்டான்
ஆண் : அழகு என்பது ஆண்பாலா
பெண்பாலா என்பதில் எனக்கு
சந்தேகம் தீா்ந்தது அழகு என்பது
நிச்சயம் பெண்பாலடா ஹே ஹே
கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா
ஆண் : மின்னலை பிடித்து
மின்னலை பிடித்து மேகத்தை
துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்
விஷ்லிங் : …………………………………..
ஆண் : மின்மினி பிடித்து
மின்மினி பிடித்து கண்களில்
பதித்து கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்
ஆண் : தங்கத்தை எடுத்து
அம்மியில் அரைத்து மஞ்சளாய்
நினைத்து கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்
ஆண் : காவித் துறவிக்கும்
ஆசை வளா்ப்பவள் அருகம்புல்லுக்கும்
ஆண்மை கொடுப்பவள் பெண்களின்
நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே
ஒஹோ தொிந்த பாகங்கள் உயிரைத்
தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே
ஆண் : மின்னலை பிடித்து
மின்னலை பிடித்து மேகத்தை
துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்
விஷ்லிங் : …………………………………..
Comments
Post a Comment